Friday, June 18, 2010

ஈழத்தமிழன் சபிக்கப்பட்டவன்...!

திருக்குறளும்
திரிகடுகமும்
நான்மணிகடிகையும்
நாலடியாரும்
எப்படி எல்லாம் விருந்தோம்பலை
வியந்தோதி இருக்கிறது என்று
மாநாடு போட்டு நமக்கு நாமே
முதுகு தட்டி கொள்ள போகிறோம்
ஆனால்,
விருந்தோம்பலின் மாண்பை உலகிற்கு உணர்த்தியவனோ
ஒரு கவளம் சோற்றுக்காக ஈழத்தின் வீதிகளில்
அலைந்து கொண்டிருக்கிறான்
ஈழத்தமிழன் சபிக்கப்பட்டவன்...!