Thursday, December 9, 2010

படித்ததில் பிடித்தது -2

நாம் மட்டும் புரிந்து கொள்ள
நம் நட்பு புனிதமடி
தவறுகள் இருப்பினும்
தனியான பெருமையுண்டு.

உணர்ச்சியின் எல்லைக்கும்
உணர்வுகளின் எல்லைக்கும்
எமை அணைத்து வைக்க
எம்மாலே முடியுமடி!

புரிதல்கள் மட்டுமல்ல
பிரிதல்கள் கூடவே
இயல்பாக புரியுமிங்கே
இலக்கணம் தேவையில்லை.

கனமான எம் பாசம்
ரணமாகிப் போகாமல்
இயல்பாக வெளிப்படுத்த
எம்மாலே முடியுமிங்கே.

நட்பு என்ற உறவு
நம்மளவில் இருந்தாலும்
ஒரு படி உயர்த்தியாக
உயிரையும் கொடுப்போம்.

எம் நட்பின் புனிதம்
இருந்தாலும் வாழும்
இறந்தாலும் வாழும்
உயிர் உள்ளவரை தொடரும்

No comments:

Post a Comment